Wednesday, April 17, 2013

நெய்க் கடலை



தேவையான பொருள்கள் -
  1. கடலைப்பருப்பு - 1/4 கிலோ  
  2. மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
  3. நெய் -2 மேஜைக்கரண்டி
  4. உப்பு  - தேவையான அளவு
  5. ரிபைண்டு எண்ணெய் - 200 மில்லி
செய்முறை -
  1. முதலில் கடலைப் பருப்பை 5 மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை நன்கு வடித்து விட்டு ஒரு தட்டில் போட்டு 15 நிமிடங்கள் வரை  நன்கு உலர விடவும்.
  2. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் உலர வைத்த பருப்பை ஒரு கைப்பிடி அளவு எடுத்து எண்ணையில் போட்டு மிதமான தீயில் வைத்து நிறம் மாறாமல்  பொரித்து எடுக்கவும். பிறகு எண்ணெயிலிருந்து எடுத்து டிஷ்யூ பேப்பர் போட்ட தட்டில் பரப்பவும். மீதமுள்ள பருப்புகளையும் இதே போல் பொரித்து எடுக்கவும்.
  3. 15 நிமிடங்கள் கழித்து, டிஷ்யூ பேப்பரை அகற்றி விட்டு மிளகாய்த்தூள், நெய், உப்பு போட்டு கிளறி காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.
குறிப்புகள் -
  1. நெய், காரம் இவை இரண்டையும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு கூட்டியோ, குறைத்தோ கொள்ளலாம்.      

1 comment:

Related Posts Plugin for WordPress, Blogger...