Thursday, April 25, 2013

உளுந்து சட்னி



பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. தேங்காய் துருவல் - 1 சிறிய கப்  (100 கிராம்)
  2. உளுந்தம் பருப்பு - 2 மேஜைக்கரண்டி
  3. மிளகாய் வத்தல் - 2
  4. தக்காளி - 1/2
  5. பூண்டுப் பல் - 3
  6. உப்பு - தேவையான அளவு                                  
தாளிக்க -
  1. நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
  2. கடுகு - 1 தேக்கரண்டி
  3. சின்ன வெங்காயம் - 4
  4. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை -
  1. அடுப்பில் கடாய் வைத்து சூடானதும் தேங்காய் துருவலை போட்டு லேசாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.                                       
  2. அதே கடாயில் உளுந்தம் பருப்பை சேர்த்து சிவக்க வறுத்து எடுத்து வைக்கவும்.
  3. பிறகு கடாயில் மிளகாய் வத்தலை போட்டு வறுத்து எடுத்து வைக்கவும்.
  4. கடைசியாக கடாயில் ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி தக்களியை போட்டு நன்கு சுருள வதக்கிக் கொள்ளவும்.
  5. வறுத்த எல்லாப் பொருள்களுடன் பூண்டுப் பல் உப்பும்  சேர்த்து மிக்ஸ்யில் போட்டு அரைக்கவும்.   
  6. அதே கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை வெங்காயம் போட்டு தாளித்து சட்னியுடன் சேர்த்து நன்றாக கலக்கி விடவும். சுவையான உளுந்து சட்னி ரெடி. இந்த சட்னி இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.

1 comment:

Related Posts Plugin for WordPress, Blogger...